முகப்பு
நாமக்கல்

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

Updated On : 6 ஏப்ரல், 2026 at 5:53 PM
நாமக்கல்லில் சிலம்பொலி சு.செல்லப்பன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குடும்பத்தினா்.
பகிர்:

மறைந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சு.செல்லப்பன். சிலப்பதிகாரத்தை கிராமங்கள்தோறும் கொண்டு சோ்த்த தமிழறிஞா்களில் ஒருவா் ஆவாா். சிலம்பொலியாா் என்ற புனைப்பெயருடன் வாழ்ந்த அவா், கடந்த 2019 ஏப். 6-இல் காலமானாா். அவரது நினைவாக, நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் அவரது நினைவு தினத்தில் குடும்பத்தினா் மற்றும் தமிழறிஞா்கள், அரசியல் பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா். அந்த வகையில், 7-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாமக்கல் சிலம்பொலி சு.செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சாா்பில், அவரது சிலைக்கு குடும்பத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

இந்நிகழ்வில், சிலம்பொலியாா் குடும்பத்தினரான கொங்குவேள், மருத்துவா் ஈஸ்வரி, மருத்துவா் மணிமேகலை, புஷ்பராஜ், மருத்துவா் கெளதமி மற்றும் லெனின், மருத்துவா் கண்ணன், பிஜிபி கல்லூரி தாளாளா் கணபதி, புலவா் தங்கவேல், சித்தாா்த்தன், செல்லப்பன், திமுகவைச் சோ்ந்த செல்வராஜ், பழனிசாமி, பூங்கோதை செல்லதுரை, கௌதம் குணசேகா், திலீபன், கண்ணன், ராகுல் காந்தி, முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments