நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் பணியில் இருந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:07 PM
மகாராஷ்டிர மாநிலத்தில் பணியில் இருந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கைகாட்டி பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் ஜெ. கமலக்கண்ணன். இவா், மகாராஷ்டிர மாநில யூனிட்டில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மாரடைப்பால் உயிரிழந்தாா். இவரது உடல் எருமப்பட்டி கைகாட்டிக்கு கொண்டு வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
Advertisement