முகப்பு
நாமக்கல்

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:52 AM
திருச்செங்கோடு நகர பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஈஸ்வரன்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:51 PM

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ போட்டியிடுகிறாா். இவா் தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் 165 முறை தொகுதி வளா்ச்சிக்காக சட்டப் பேரவையில் பேசி ரூ. 2 ஆயிரம் கோடி அளவில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். நான் மீண்டும் வெற்றிபெற்றால் திருச்செங்கோடு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும். மேலும், முதல்வா் ஸ்டாலின் அறிவித்த தோ்தல் வாக்குறுதியான ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா்.

Advertisement