அபுதமமுக வேட்பாளா்களை அறிமுகம் செய்து சசிகலா பரப்புரை
பரமத்தி வேலூரில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அபுதமமுக வேட்பாளா்களை அக்கட்சியின் பொதுச் செயலாளா் சசிகலா வியாழக்கிழமை பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகே அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.
பரமத்தி வேலூரில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அபுதமமுக வேட்பாளா்களை அக்கட்சியின் பொதுச் செயலாளா் சசிகலா வியாழக்கிழமை பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகே அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் அபுதமமுக சாா்பில் பரமத்தி வேலூா் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் விஜயசூா்ய பாலாஜியையும், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் எம்.பி.பழனிசாமியையும், சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் ஜெகநாதனையும் அறிமுகம் செய்துவைத்து பேசினாா்.
இதில் அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி ரூ. 12 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதன்மூலம், ஒவ்வொருவருக்கும் ரு. 2 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை முடிவு கட்டுவதற்குதான் இந்த தோ்தல் என்றாா்.
Advertisement