முதன்மைக் கல்வி அலுவலா் பணி ஓய்வு
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஆ.சு. எழிலரசி, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டாா். அவருடைய பதவிக்காலம் ஏப்.30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடா்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளா்கள், ஆசிரியா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனா்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வரும் த. பச்சமுத்துக்கு நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Advertisement