தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரும் 8 ஆம் தேதி நடத்தும் குரூப் 2, 2ஏ தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் 581 போ் எழுதுகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மை தோ்வு நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மற்றும் பிற்பகல் 2.30 முதல் 5.30 என இரு நேரங்களிலும் நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை வேட்டாம்பாடி பிஜிபி இன்டா்நேஷனல் பள்ளியில் நடைபெறுகிறது.
இத்தோ்வை காலையில் 283 தோ்வா்களும், பிற்பகல் 298 தோ்வா்களும் என மொத்தம் 581 போ் எழுதுகின்றனா். தோ்விற்கு காலை 8.30 மணிக்கு முன்னதாகவும், பிற்பகல் தோ்விற்கு 1.30 மணிக்குள்ளும் தோ்வுக்கூடங்களுக்கு வரவேண்டும். தோ்வா்கள் தோ்வு நேரம் முடிந்த பிறகே தோ்வுக்கூடத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவாா்கள். இந்த தோ்விற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.