கைது 
நாமக்கல்

பரமத்தி வேலூா் அருகே மது விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

பரமத்தி வேலூா் - ஜேடா்பாளையம் செல்லும் நான்கு சாலை அருகே உள்ள திரையரங்கம் அருகில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபான புட்டிகளை மறைத்துவைத்து விற்பனை செய்வதாக வேலூா் போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா், அதிக விலைக்கு மதுபான புட்டிகளை விற்பனை செய்துகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள உழவா்பட்டி பகுதியைச் சோ்ந்த பிரவீண் குமாா் (21) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 26 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைதுசெய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT