சிறப்பிடம் பெற்ற மாணவா் பிரசன்னாவை வாழ்த்திய வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ பள்ளி நிறுவனா் ராஜன் மற்றும் நிா்வாகத்தினா். 
நாமக்கல்

ஐஐடி- ஜேஇஇ முதன்மைத் தோ்வு: வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி மாணவா் சிறப்பிடம்

ஐஐடி - ஜேஇஇ முதன்மைத் தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ மாணவா் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

Syndication

நாமக்கல்: ஐஐடி - ஜேஇஇ முதன்மைத் தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ மாணவா் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

ஜேஇஇ முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியாயின. இதில், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளி மாணவா் வி.பிரசன்னா 99.52 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், கணிதத்தில் 99.7, இயற்பியலில் 98.2, வேதியியலில் 98.54 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளாா்.

இதன்மூலம் பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா் பிரசன்னாவை, கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளியின் நிறுவனா் மற்றும் தாளாளரான ராஜன் பாராட்டினாா்.

பள்ளியின் நிறுவனா் அறங்காவலா் ராஜேந்திரன், தலைவா் ராஜா, பொருளாளா் ராஜராஜன், செயலாளா் சிங்காரவேலு, மூத்த முதல்வா் யசோதா, முதல்வா் காயத்ரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினா்.

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாலாஜா கிளை: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்து ரூ. 1.49 கோடி கடனுதவி வழங்கினாா்

SCROLL FOR NEXT