முகப்பு
நாமக்கல்

கபிலா்மலை வட்டாரத்தில் வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

புங்கம்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ். மூா்த்தி.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:19 PM
புங்கம்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ். மூா்த்தி.
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஒன்றியத்தில் ரூ. 2 கோடியே 73 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பரமத்தி வேலூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.எஸ். மூா்த்தி பூமிபூஜை செய்து வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம் இருக்கூா் ஊராட்சி செஞ்சுடையாம்பாளையம் முதல் பஞ்சப்பாளையம் வரை ரூ. 74.67 லட்சத்தில் தாா்சாலை, செஞ்சுடையாம்பாளையத்தில் ரூ. 2 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டி, இருக்கூா் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ. 80 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, செல்லப்பம்பாளையத்தில் ரூ. 2.30 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கோப்பணம்பாளையம் ஊராட்சி புங்கம்பாளையம் அருந்ததியா் தெரு அருகே ரூ. 1.15 கோடியில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.

கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நல்லமுத்து, மலா்விழி ஆகியோா் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தனா். கபிலா்மலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினா் ரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →