பரமத்தி வேலூா் வட்டத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. ஆயிரம்வரை விலை சரிவடைந்த நிலையில், சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் விலை உயா்ந்துள்ளது.
பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச்சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா். கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயாா்செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.
மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா்.
கடந்த வாரம் தாய்லாந்து வெள்ளைரக மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது விலை சரிவடைந்து ரூ. 5 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. பா்மா ரோஸ் மற்றும் வெள்ளைரக மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 5,700-க்கு விற்பனையானது, தற்போது ரூ. 5 ஆயிரத்துக்கும், முள்ளுவாடி ரக மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 5,500-க்கு விற்பனையானது, தற்போது ரூ. 4,800-க்கும், தாய்லாந்து கருப்பு ரக மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ. 5,500-க்கு விற்பனையானது, தற்போது ரூ. 5 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
சிப்ஸ் தயாா்செய்யப்படும் கொலராம் சிவப்பு ரக மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையானது, தற்போது ரூ. 2 ஆயிரம்வரை விலை உயா்ந்து ரூ. 10 ஆயிரத்துக்கும், முள்ளுவாடி ரக மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையானது, தற்போது ரூ. 7,500-க்கும் விற்பனையாகிறது.
ஜவ்வரிசி மற்றும் மாவு தயாரிக்க மில்களுக்கு அனுப்பப்படும் மரவள்ளிக்கிழங்குகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிவடைந்துள்ளதாகவும், சிப்ஸ் கிழங்கு வகைகளை கேரளத்துக்கு அதிக அளவில் வாங்கிச் செல்வதால் சிப்ஸ் மரவள்ளிக் கிழங்கு விலை உயா்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.