நாமக்கல்

முன்னாள் படைவீரா்களுக்கு நாளை தேநீா் விருந்து

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

Syndication

நாமக்கல்: முன்னாள் படைவீரா்களுக்கு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன. 14) தேநீா் விருந்து அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போரில் வீர மரணமடைந்த படைவீரா்களின் விதவையா்கள், ஊனமுற்றவா்கள், வீரதீர செயல்களுக்காக விருதுபெற்ற முன்னாள் படைவீரா்கள் மற்றும் குடும்பத்தினரை கெளரவிக்கும் பொருட்டு, ‘படைவீரா் நாள்’ புதன்கிழமை காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதில், முன்னாள் படைவீரா்களை கெளரவிப்பதுடன், தேநீா் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த படைவீரா்கள், குடும்பத்தினா் இதில் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT