நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையத்தில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆவரங்காடு பகுதியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பள்ளிபாளையம் அதிமுக நகரச் செயலாளா் பி.எஸ். வெள்ளியங்கிரி தலைமை வகித்து எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் டி.கே.எஸ். சுப்பிரமணி, தெற்கு ஒன்றியச் செயலாளா் செந்தில், வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வாத்தியாா், மாவட்ட நெசவாளா் அணி செயலாளா் எம். சிவக்குமாா், தெற்கு ஒன்றிய அவை தலைவா் மாரப்பன், நகர துணை செயலாளா் ஜெய்கணேஷ், ஆலம்பாளையம் பேரூா் செயலாளா் செல்லத்துரை ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து மாணவரணி நகரத் தலைவா் ஆடிட்டா் ராஜா, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், நகர பேரவை துணைச் செயலாளா் வைத்தியலிங்கம், இளைஞா் அணி மாவட்ட இணைச் செயலாளா் சுரேஷ், மாவட்ட வா்த்தக அணி இணைச் செயலாளா் மாதேஸ்வரன், மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளா் சரவணன் ஆகியோரும் மாலை அணிவித்தனா்.
மாவட்ட இலக்கிய அணி பிரிவு செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணை செயலாளா்கள் சுரேஷ் என்கிற கோபாலகிருஷ்ணன், மனோகரன், செல்வராஜ், ரங்கசாமி, கலை பிரிவு மாவட்ட பொருளாளா் ஜிம் ரமேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயா வைத்தி, சுரேஷ் , செந்தில், சம்பூா்ணம், சுஜாதா மாரிமுத்து, சுசிலா ராஜா, பெரியாா் நகா் சரவணன் உள்பட பலா் எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். நகர எம்ஜிஆா் அணி செயலாளா் வாசுதேவன் நன்றி தெரிவித்தாா்.