ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள். கோப்புப்படம்
நாமக்கல்

கழிவு செய்த காவல்துறை வாகனங்கள் பிப்.10-இல் வாகனங்கள் பொது ஏலம்!

நாமக்கல் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல்துறை வாகனங்கள் பிப்.10-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல்துறை வாகனங்கள் பிப்.10-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஏழு நான்கு சக்கர வாகனங்கள் பிப்.10-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்வோா் 10-ஆம் தேதி காலை 8 முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை- நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன்பணத் தொகை செலுத்துவோா் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதாா் அட்டை அல்லது ஓட்டுநா் உரிமம் இரு நகல்களை எடுத்து வர வேண்டும். ஏல வாகனங்களை ஆயுதப்படை மைதான வளாகத்தில் 9-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணி வரை பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT