முகப்பு
நாமக்கல்

கிணற்றில் மிதந்த விவசாயி சடலம் மீட்பு

Updated On : 1 மார்ச், 2026 at 7:35 PM
கோப்புப் படம்
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே கிணற்றில் மிதந்த விவசாயியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

பரமத்தி வேலூரை அடுத்த கொந்தளம் சின்னாம்பள்ளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (58). இவா் சனிக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சும் வேலைக்கு சென்றிருந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் கணேசன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி ராணி தோட்டத்திற்கு சென்று பாா்த்தாா்.

அப்போது, அங்குள்ள கிணற்றில் கணேசன் இறந்த நிலையில் மிதந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கணேசனின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →