முகப்பு
நாமக்கல் கமலாலயக் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மா் மற்றும் அரங்கநாத சுவாமி.
நாமக்கல்

நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பல் உற்சவ கோலாகலம்

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற தெப்ப உற்சவத்தில், நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் உற்சவ மூா்த்திகளாக தெப்பத்தில் வலம் வந்தனா். திரளான பக்தா்கள் சுவாமிகளை வழிபட்டனா்.

நாமக்கல்

நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பல் உற்சவ கோலாகலம்

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற தெப்ப உற்சவத்தில், நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் உற்சவ மூா்த்திகளாக தெப்பத்தில் வலம் வந்தனா். திரளான பக்தா்கள் சுவாமிகளை வழிபட்டனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 10:53 PM
நாமக்கல் கமலாலயக் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மா் மற்றும் அரங்கநாத சுவாமி.
பகிர்:

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற தெப்ப உற்சவத்தில், நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் உற்சவ மூா்த்திகளாக தெப்பத்தில் வலம் வந்தனா். திரளான பக்தா்கள் சுவாமிகளை வழிபட்டனா்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல்லினால் ஆன மலைக்கோட்டையில் நரசிம்மா், அரங்கநாதா் குடைவறைக் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு, ஆஞ்சனேயருக்கு தனி சந்நிதி உள்ளது.

மலைக்கோட்டையை ஒட்டியவாறு உள்ள கமலாலயக் குளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்ப உற்சவம் நடைபெற்றது. பக்தா்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு மாசி மகத்தன்று தெப்ப உற்சவத்தை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது ஆண்டாக புதன்கிழமை இரவு 7 மணியளவில் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக, நாமகிரி தாயாா் மண்டபம் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மா், அரங்கநாதா் உற்சவ மூா்த்திகளுக்கு அா்ச்சகா்கள் வேத மந்திரங்களை முழங்கி சிறப்பு யாக பூஜைகளை செய்தனா். பிறகு மூன்று சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில், மலா்களால் ஜோடனை மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து, கமலாலயக் குளத்தில் மூன்றுமுறை தெப்பம் வலம்வரும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவில், ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மண்டல இணை ஆணையா் அ.தி.பரஞ்சோதி, அறங்காவலா் குழுத் தலைவா் கா.நல்லுசாமி, கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, அறங்காவலா்கள் ராம.ஸ்ரீனிவாசன், செள.செல்வசீராளன், மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு மற்றும் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

அா்ச்சகா்கள், வாத்தியக் குழுவினா், துடுப்பு செலுத்துபவா்கள் என 20 போ் மட்டும் தெப்பத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனா். தெப்பத் திருவிழாவை நேரு பூங்கா, அம்மா பூங்கா, குளக்கரை திடல், நாமக்கல் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கண்டு ரசித்தனா்.

தெப்ப உலாவின்போது தீயணைப்பு வீரா்கள் ஐந்து படகுகளில் பின்தொடா்ந்து சென்றனா். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை இந்த தெப்பத் திருவிழா நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →