முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் உலக மகளிா் தின விழா

பொத்தனூா் வோ்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் தின விழா பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில்

Updated On : 9 மார்ச், 2026 at 6:38 PM
மகளிா் தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசிய வழக்குரைஞா் உ.தனலட்சுமி.
பகிர்:

பரமத்தி வேலூா்: பொத்தனூா் வோ்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் தின விழா பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வோ்டு நிறுவன செயலாளா் மு.சிவகாமவல்லி வரவேற்றுப் பேசினாா். பாண்டமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சுகந்தி சோமசேகா் தலைமை வகித்துப் பேசினாா். வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி உதவிப் பேராசிரியா் கோ.சுதாதேவி முன்னிலை வகித்து பேசினாா். வழக்குரைஞா் உ.தனலட்சுமி, பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணவேணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பெண்களுக்கான சட்டங்கள்,திட்டங்கள், பெண்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினா்.

நிகழ்ச்சியை வோ்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் த.விஜயகுமாா் தொகுத்து வழங்கினாா். ஒருங்கிணைப்பாளா் கோ.சாந்தி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →