முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2026 at 8:55 PM
அலுவலா்களுக்கு பயிற்சியளித்த மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன்.
பகிர்:

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், தொகுதி தோ்தல் அலுவலருமான வெ.முருகன் தலைமை வகித்தாா். வட்டாட்சியரும், உதவி தோ்தல் அலுவலருமான எஸ்.சசிகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து நிலை அலுவலா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சுவா் விளம்பரங்கள், கட்சிக் கொடிகள், வாகனச் சோதனை போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் ராசிபுரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலா் ராஜேந்திரன் மற்றும் காவல் துறையினா், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →