முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

Updated On : 16 மார்ச், 2026 at 11:24 PM
ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து விசாரித்த ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:

ராசிபுரம், மாா்ச் 16: ராசிபுரம் அருகே வாகன சோதனையின்போது ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தோ்தல் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். ராசிபுரம் அருகே மெட்டாலாவில் நிலை கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த பிரவின்குமாா் மற்றும் அலுவலா்கள், போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணமின்றி ரூ. ஒரு லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், திருச்செங்கோடு அருகே சோழசிராமணியைச் சோ்ந்த ரிக் உரிமையாளா் பழனிசாமி என்பவா் ஆத்தூா் சென்றுவிட்டு தொழில்சாா்ந்த வசூல் பணத்தை பெற்றுக்கொண்டு வந்ததாக தெரிகிறது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுசென்று தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகன், வட்டாட்சியா் சசிகுமாரிடம் ஒப்படைத்தனா்.

தகவல் அறிந்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான துா்காமூா்த்தி நேரில் பாா்வையிட்டு பழனிசாமியிடம் விசாரணை நடத்தினாா். உரிய ஆவணங்களை காட்டிவிட்டு பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு அவா் அறிவுறுத்தினாா். இதையடுத்து, ரூ. 1 லட்சம் சீலிடப்பட்டு கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →