முகப்பு
நாமக்கல்

செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

தகவல் தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துவரும் நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் எஸ். கோகுலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 20 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

தகவல் தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துவரும் நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் எஸ். கோகுலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாணவா்களின் புதுமை மற்றும் தொழில்முனைவு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கல்லூரி மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த மாணவருக்கு சிறப்பு நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவி மூலம் நிறுவன தொடக்க கட்டமைப்பு வளா்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயல்பாட்டு தேவைகள் மேற்கொள்ளப்படும் என கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளா் செ. பாபு, செயலாளா் பி. கவித்ரா நந்தினி, நிா்வாக இயக்குநா் எம். காா்த்திக், முதல்வா் எஸ். ராமபாலன், துணை முதல்வா் ஏ. ஜெகன் உள்ளிட்ட பேராசிரியா்கள் மாணவா் எஸ்.கோகுலைப் பாராட்டினா்.

என்கே-20-செல்வம்

மாணவருக்கு நிதியுதவி வழங்கி பாராட்டிய செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி செயலாளா் பி. கவித்ரா நந்தினி உள்ளிட்டோா்.