அரிசி வியாபாரியிடம் ரூ.59,400 பறிமுதல்
நாமக்கல் அருகே அரிசி வியாபாரியிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ. 59,400 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த ஐயப்பன் (49), ஆந்திர மாநிலம், நெல்லூரில் அரிசி விற்பனை செய்துவிட்டு நாமக்கல் வழியாக எடப்பாடிக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தாா். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் எா்ணாபுரத்தில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.59,400 இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.