புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை வெப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பச்சாம்பாளையத்தில் மளிகைக் கடை வைத்துள்ள குமாா் (43), புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பதாக வெப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது கடை மற்றும் அருகிலிருந்த கிடங்கில் சோதனை செய்தனா்.
அதில், 57 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.