மேட்டூரில் ஆடி முதல் நாளான வியாழக்கிழமை தேங்காயைச் சுட்டு சுவாமிக்குப் படையலிட்டனர்.
ஆடி முதல் நாளில் தமிழர்கள் தேங்காயில் எள், கடலை, சர்க்கரை, அவல் உள்ளிட்ட பல தானியங்களை போட்டுப் வைப்பார்கள். பின்னர், வீட்டிற்கு எதிரே அந்த தெருவில் உள்ளவர்கள் தேங்காய்களை குச்சிகளில் குத்தி வைத்து நெருப்பில் வேக வைப்பார்கள். பிறகு, அங்குள்ள விநாயகர் கோயில் வைத்து படைத்து பிரசாதம் வழங்குவார்கள். மேட்டூர் அருகே உள்ள புதுச்சாம்பள்ளி சுப்பிரமணிய நகரில் தேங்காயை வேகவைத்து விநாயகருக்கு படைக்கப்பட்டது. பின்னர், தேங்காய் வேகவைத்த குச்சிகளைக் கொண்டு சிறுவர், சிறுமியர் விளையாடினார்கள்.