கீரிப்பட்டியில் அனுமதியின்றி மதுபானங்களை விற்றதாக ஒருவரை மல்லியகரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மல்லியகரையை அடுத்துள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி மகன் முருகேசன் (40). இவர் அப்பகுதியில் அனுமதியின்றி மதுபானங்களை விற்றுவருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் உத்தரவின்படி மல்லியகரை காவல் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம், முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.மேலும் அவரிடம் இருந்த மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தார்.