சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நவ. 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என சேலம் மின் பகிர்மான வட்டத்தின் செயற்பொறியாளர் அ.மௌலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தப்படும் செய்யப்படும் பகுதிகள்: கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, வீட்டுவசதி வாரியம், சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூர், நகரமலை அடிவாரம்.