சேலம்

அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி

DIN

டெங்கு பரவாமல் தடுப்பதற்காக  சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப்படுத்தும்  பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தேவையற்ற செடிகள்,  புதர்கள், குப்பைகளை சங்ககிரி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.   இதை கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன் ஆய்வு செய்தார்.
அப்போது,  தேவையற்ற செடிகளை பொக்லின் இயந்திரகளை கொண்டு அகற்றவும்,  மருத்துவ அலுவலர் குடியிருப்பு சிதலமடைந்த நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றவும் அறிவுறுத்தினார்.  பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும்  பிளிச்சீங் பவுடர் தெளிக்க உத்தரவிட்டார்.  
அப்போது மருத்துவ அலுவலர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் வீரபாண்டியன்,  பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் பி.மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT