சேலம்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி 

தினமணி

ஆத்தூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் விழா ஆத்தூர் கோட்டாட்சியர் ம. செல்வன் தலைமையில் ஆத்தூரில் நடைபெற்றது.
 கல்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு 974 மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி. அர்ச்சுணன், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம். சின்னதம்பி, ஆத்தூர் நகரச் செயலாளர் அ. மோகன், ஒன்றியச் செயலாளர் சி. ரஞ்சித் குமார், நரசிங்கபுரம் நகரச் செயலாளர் சி.மணிவண்ணன், ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா. தென்னரசு, ஆத்தூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி. முரளிசாமி, ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் என். ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT