கோடை விடுமுறை தொடங்கியதால் பொம்மைகள் விற்பனை அதிகரிப்பு
கோடை விடுமுறை தொடங்கியதால், வாழப்பாடியில் பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளன.
கோடை விடுமுறை தொடங்கியதால், வாழப்பாடியில் பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளன.
அனைத்துப் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான கல்லூரிகளும், ஏப்ரல் மாத இறுதியில் இருந்து மே மாத இறுதி வரையிலான ஒரு மாதத்துக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்காத பெற்றோர்கள், குழந்தைகள் வெயிலில் சுற்றுவதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே விளையாடி மகிழ்ந்திடும் வகையில், விதவிதமான பொம்மைகளை வாங்கித் தருகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கியதால், வாழப்பாடி பகுதியில் பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளன.
வாழப்பாடியில் மக்கள் நடமாடும் சாலையோரத்திலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் குவித்து வைத்து, பொம்மைகளை வியாபாரிகள் கூவிக்கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
இதில், வீட்டு உபயோக சாமான்கள், மருத்துவர்களின் கருவிகள், வாகனங்கள், பழங்கள், விலங்குகள், குழந்தைகளின் மாதிரி பொம்மைகளும், பேட்டரியிலும், ரிமோட்டிலும் இயங்கும் வாகனங்களும் அதிகளவில் விற்பனையாகின்றன.