பாரதிதாசன் பிறந்த நாள் விழா
கெங்கவல்லி அருகே கடம்பூரில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சமூக ஆர்வலர் என்.டி.எஸ்.மீனாம்பிகா தலைமையில் கொண்டாடப்பட்டது.
கெங்கவல்லி அருகே கடம்பூரில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சமூக ஆர்வலர் என்.டி.எஸ்.மீனாம்பிகா தலைமையில் கொண்டாடப்பட்டது.
பாரதிதாசன் உருவப்படத்துக்கு அரசுப் பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பாரதிதாசன் கவிதைகள் நூல்கள் வழங்கப்பட்டன. ஆர்த்தி நன்றி கூறினார்.