மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,299 அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதியான பாலாறு நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் புதன்கிழமை லேசான மழை பெய்தது.
மழையின் காரணமாக வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 603 கனஅடியிலிருந்து 1,299 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு 32.94 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 8.74 டி.எம்.சியாக இருந்தது.