கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையில் ஓமலூர் மின்வாரியப் பணியாளர்கள் இரு குழுக்களாக பணியாற்றி வருகின்றனர்.
கஜா புயலால் ஏற்பட்டுள்ள மின் பழுதுகளை சரிசெய்யும் நோக்கில் சேலம் மாவட்டம், ஓமலூர் கோட்ட மின்சார வாரியத்தின் சார்பில் 25 பேர் மற்றும் 19 பேர் கொண்ட இரு குழுக்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஓமலூர் கோட்ட செயற்பொறியாளர் செல்வகுமார் தலையிலான குழுவினர் மின்சார பராமரிப்புப் பணிகள், புதிய கம்பம் நடுதல், மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகளை செய்ய உள்ளனர். மின் கம்பிகள், மின் கம்பிகளை இணைக்கும் பீங்கான்கள் உள்பட சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருள்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.