தேமுதிக 14-ஆம் ஆண்டு விழா ஆத்தூரில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாரதா ரவுண்டானாவில் உள்ள தேமுதிக கொடியை சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் ஏ.ஆர்.இளங்கோவன் ஏற்றிவைத்து, இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சுபா ரவி, கேப்டன் மன்றச் செயலர் கே.ஏ.சுல்தான்பாஷா, நகரச் செயலர் சீனிவாசன், ஒன்றியச் செயலர் குமாரசாமி, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.