சேலம்

லாரியை கடத்தி டயர்களை திருடிய மர்ம நபர்கள்

DIN

தலைவாசல் அருகே லாரியைக் கடத்திச் சென்று 6 டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள வேப்பம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவர் தனக்கு சொந்தமான டிப்பர் லாரியை ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூர் பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை சென்று பார்த்தபோது அவரது லாரியை காணவில்லை. இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் ஊரக காவல் ஆய்வாளர் ஆர்.சரவணன் விசாரித்து வந்தார்.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை செல்லியம்பாளையம் அருகே டிப்பர் லாரி ஒன்று அனைத்து டயர்களும் கழற்றப்பட்ட நிலையில் நிற்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT