கெங்கவல்லி,தம்மம்பட்டி சுற்றுவட்டார ஊர்களில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கௌதமசிகாமணி வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.
கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒதியத்தூர்,நடுவலூர்,ஆணையாம்பட்டி,தெடாவூர்,கெங்கவல்லி,கடம்பூர்,74.கிருஷ்ணாபுரம்,கூடமலை ஆகிய ஊர்களில் வாக்குச் சேகரித்தார்.
மாலையில் தகரப்புதூர்,கொண்டயம்பள்ளி,மூலப்புதூர்,கோனேரிப்பட்டி,செந்தாரப்பட்டி,தம்மம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் வெள்ளிக்கிழமை இரவு வரை திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்குச் சேகரித்தார். திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்குச் சேகரித்தனர்.