சேலம்

கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

ஆத்தூரில் போக்ஸோ சட்டத்தில் கைதான கிராம நிர்வாக அலுவலர் சரவணனை ஆத்தூர் கோட்டாட்சியர் அபுல் காசிம் பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.

DIN


ஆத்தூரில் போக்ஸோ சட்டத்தில் கைதான கிராம நிர்வாக அலுவலர் சரவணனை ஆத்தூர் கோட்டாட்சியர் அபுல் காசிம் பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.
ஆத்தூரை அடுத்த கடம்பூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தவர் சரவணன் (34). இவர் அவருடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த சரவணனை கடந்த வாரம் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் (பொ) என். கேசவன் கைது செய்து சிறையில் அடைத்தார். இதையடுத்து, ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் அபுல்காசிம், கைதான சரவணனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT