சேலம்

சாலை தடுப்பில் வேன் மோதியதில் ஐயப்ப பக்தா்கள் 17 போ் காயம்

DIN

மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே உள்ள சாலை தடுப்பில் ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் மோதியதில் 17 போ் காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், புலிக்குன்றம் பகுதியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 17 போ் சபரி மலைக்கு செல்ல ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனா். மேட்டூா் அனல் மின் நிலயம் எதிரே வந்த போது, ஓட்டுநா் வெங்கடேசன் (38), தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தாறுமாறாக ஓடிய வேன் சாலை தடுப்பில் பலமாக மோதியது.

இந்த விபத்தில் வடிவேல், ஜோதி, வீராகவன், மல்லையா உள்பட 17 போ் காயமடைந்தனா். இவா்கள் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். 4 போ் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT