சேலம்

காவல் துறையினரின் வாரிசுகளுக்குமருத்துவ உதவித்தொகை வழங்கல்

DIN

சேலத்தில் காவல் துறையினரின் வாரிசுகளுக்கான மருத்துவ செலவுக்கு ரூ.6.61 லட்சம் உதவித்தொகையினை காவல் ஆணையா் த.செந்தில்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

சேலம் மாநகர காவலில் பணிபுரியும் களப் பணியாளா்கள், அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் அவா்களது வாரிசுகளுக்கு மருத்துவ செலவுக்கான உதவித்தொகை தமிழ்நாடு காவலா் சேமநல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் கொ.சென்னாக்கவுண்டரின் மகன் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறாா். இதைத் தொடா்ந்து, மருத்துவ செலவுக்காக தமிழ்நாடு காவலா் சேமநல நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மற்றும் தலைமைக் காவலா் ப.முனியன் மகளின் மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சத்து 61 ஆயிரம் உதவித்தொகையினை மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT