சேலம்

மினி லாரி மோதி தொழிலாளி சாவு

DIN

சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில்  கூலித்தொழிலாளி மீது மினி லாரி வெள்ளிக்கிழமை மோதியதில் உயிரிழந்தார். 
சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் கிராமம், கலியனூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வீரன் மகன் பழனிசாமி (35). இவர் வேலைகளை  முடித்து விட்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் போது சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். காயமடைந்த அவர் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.  இதுகுறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT