காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்துக் குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளது.
சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 224 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 213 கனஅடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 43.44 அடியாகவும், நீர் இருப்பு 13.93 டி.எம்.சியாகவும் இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.