சேலம்

அதிமுகவில் தொண்டர்கள்தான் தலைவர்கள்

DIN


அதிமுகவில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.எடப்பாடியில் சனிக்கிழமை நடந்த மேம்பாலத் திறப்பு நிகழ்ச்சியை அடுத்து பயணியர் மாளிகையில் நிருபர்களிடம் அவர் கூறியது:
உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். இந்த ஆட்சி 10 நாளில் கவிழும்,  ஒரு மாதத்தில் கவிழும் என்றெல்லாம் கூறி வந்தனர்.  இந்த அரசு இரண்டு ஆண்டுகள், 4 மாதங்களைக் கடந்துள்ளது.  இந்த அரசு எஞ்சிய காலம் முழுவதும் நீடிக்கும். 2021-இல் அதிமுக வெற்றி பெற்று அரசை அமைக்கும்.
அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை.  அதிமுக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அமமுக கட்சியில் இருந்து படிப்படியாக பலர் அதிமுகவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். தொண்டர்கள் ஆளும் கட்சி அதிமுக. இங்கு தலைவர் என்ற சொல்லுக்கு இடமில்லை.  தொண்டர்கள் எல்லோரும் தலைவர்கள்தான் என்றார் முதல்வர் பழனிசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT