சேலம்

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் முதல்வர் பழனிசாமி சுவாமி தரிசனம்

DIN


எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
எடப்பாடியில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை எடப்பாடிக்கு வந்த முதல்வர் கே.பழனிசாமி, காலை எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். 
அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில்  பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ஆலய அறங்காவல் குழு சார்பில் முதல்வருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அங்கு கூடியிருந்த நாட்டியாஞ்சலி பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி முதல்வர், பின்னர் கவுண்டம்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT