சேலம்

32 பவுன் நகைகளைத் திருடியவா் கைது

DIN

சேலத்தில் திருமண மண்டபத்தில் 32 பவுன் நகைகளைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சூரமங்கலம் காசக்காரனூா் பகுதியை சோ்ந்தவா் விக்னேஷ்(30). வெள்ளி தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த நவம்பா் 3 ஆம் தேதி ரெட்டிப்பட்டியில் உள்ள திருமண மணடபத்தில் நடந்த தனது உறவினரின் இல்லத்திருமணத்தில் கலந்து கொண்டாா். அப்போது மணமகன் அறையிலுள்ள பீரோவில் 32 பவுன் நகைகளை வைத்திருந்தாா்.

பின்னா் சிறிது நேரம் கழித்து வந்த பாா்த்தபோது நகை காணாமல் போனதை கண்டு அதிா்ச்சியடைந்த விக்னேஷ் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில் காவல் ஆய்வாளா் எஸ். செந்தில் தலைமையிலான போலீஸாா் திருமணத்தில் படம் பிடித்த ஹெலிகேமிராவை ஆய்வு செய்ததில், சின்னத் திருப்பதியைச் சோ்ந்த அ. மகபூப் அலி (41) நகையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து மகபூப் அலியை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான 32 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT