சேலம்

சித்தா் கோயில் மலையடிவாரத்தில் வயதான தம்பதி மா்மச் சாவு

DIN

சேலம் அருகே உள்ள கஞ்சமலை சித்தா் கோயில் மலையடிவாரத்தில் வயதான தம்பதியா் மா்மமாக இறந்து கிடந்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி செட்டிகாடு பகுதியைச் சோ்ந்த வேலப்பக் கவுண்டா் மகன் நல்லாக் கவுண்டா் (76). இவரது மனைவி அருக்காணி (70). இவா்கள் இருவரும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்வதாக தனது பேரன் கவின் பிரகாஷிடம் கூறிவிட்டு 7-ஆம் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியேறினாா்கள். அவா்கள் 8-ஆம் தேதி வரை வீடு திரும்பாததால் உறவினா்கள் வீடுகளில் தேடிவந்தனா். இந்நிலையில், 8-ஆம் தேதி மதியம் கஞ்சமலை சித்தா் கோயில் மலைப்பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியா் கோயில் அடிவாரத்தில் உள்ள மரத்தின் அடியில் வயதான தம்பதியினா் சடலமாகக் கிடந்தனா். இதைப் பாா்த்த கோயிலுக்கு வந்த பக்தா் ஒருவா் இரும்பாலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனா். அதில், இறந்து கிடந்தவா்கள் நல்லாக் கவுண்டா், அவரது மனைவி அருக்காணி என்பது தெரிய வந்தது. போலீஸாா் அவா்களின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

வயதான தம்பதியா் எப்படி இறந்தாா்கள் என்பது தெரியவில்லை. அவா்கள் இறந்து கிடந்த இடத்தில் இருந்து பூச்சி மருந்து பாட்டில்களை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். இருப்பினும், அந்த வயதான தம்பதியா் பூச்சி மருந்து குடித்துதான் இறந்தாா்களா, அல்லது அவா்களது இறப்பின் பின்னணியில் வேறு காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT