தேசிய அளவிலான சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் வென்ற தமிழக அணிக்காக சேலம் மாணவிகள் மூன்று பேர் விளையாடி சிறப்பித்துள்ளனர்.
46 ஆவது தேசிய அளவிலான சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டி ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் அண்மையில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி - மகாராஷ்டிரா அணியைவிட 31 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடம் பிடித்தது.
தமிழ்நாடு அணியின் சார்பில் சேலம் குகை செயின்ட் ஜோசப் பள்ளி மாணவிகள் லீனா, ஜென்ஸி, ஸ்வேதா ஆகிய 3 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். தமிழ்நாடு அணியின் சார்பில் பயிற்சியாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பள்ளியின் சார்பில் முதல்வர் லூர்துமேரி, தாளாளர் டெக்லா மற்றும் சேலம் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் பிஜுஜோசப், இணை செயலாளர்கள் முருகேசன், பாஸ்கர், தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.