நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நரசிங்கபுரம் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகள் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.
புதிய குடிநீர் இணைப்பு கோரும் விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் எவ்வித தாமதமும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 24 மணிநேரத்துக்குள் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிய குடிநீர் இணைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வைப்புத் தொகை மற்றும் இதரக் கட்டணங்களை 10 தவணைகளில் செலுத்த இத்திட்டத்தின்கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.