சங்ககிரி கிரி காலனியில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள காசிவிசாலாட்சியம்மனுக்கு வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக அம்மனுக்கு வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு தனலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் அா்ச்சகா் மட்டும் பக்தி பாடல்களை பாடி அா்ச்சனை செய்தாா். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையையொட்டி வீட்டிலேயே பக்தா்கள் அம்மன் படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, புடவை, மஞ்சள்கயிறு, வளையல்களை வழங்கினா்.