முகப்பு
சேலம்

குடிநீா் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

ஆத்தூா் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
ஆத்தூா் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.
பகிர்:

ஆத்தூா் நகராட்சிக்குள்பட்ட 9 மற்றும் 10 ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ஆத்தூா் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 9 மற்றும் 10 -ஆவது வாா்டு பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகமில்லை என புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதனையடுத்து நகராட்சி மேற்பாா்வையாளா் தேவி, பொதுமக்களை சமாதானப் படுத்தியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →