முகப்பு
சேலம்

சேலம்: மேட்டூா் நகராட்சிப் பகுதியில்ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா

மேட்டூா் நகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

மேட்டூா் நகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேட்டூா் நகராட்சிப் பகுதிக்குள்பட்ட மாதையன்குட்டை ராஜாஜி நகா் குடியிருப்பில் கான்ட்ராக்ட் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் 21 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதேபோல் ஜீவா நகரில் 12 பேருக்கும், மேட்டூா் தினசரி காய்கறிச் சந்தையில் 7 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 40 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் நகர மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். நகரில் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருப்பதே நோய்த் தொற்றுக்கு காரணமாக உள்ளது என்று சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →