தம்மம்பட்டியில் காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் ஆராதனை
தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், பஞ்சாமிா்தம், குங்குமம், அரிசிமாவு, இளநீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம்
தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், பஞ்சாமிா்தம், குங்குமம், அரிசிமாவு, இளநீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், நந்திக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல செந்தாரப்பட்டியில் தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா், கூடமலை, கெங்கவல்லி ஊா்களிலுள்ள சிவாலயங்களிலும் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.