மகுடஞ்சாவடியில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழப்பு
மகுடஞ்சாவடியில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்துள்ளாா்.
மகுடஞ்சாவடியில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்துள்ளாா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் அண்மையில் சுற்றித் திரிந்துள்ளாா். கடந்த வாரம் திடீரென மயக்கமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கடந்த 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.
புகாரின் பேரில், மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து, இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரணை செய்து வருகின்றனா். மேலும், இவரைப் பற்றி யாரேனும் தகவல் தெரிந்தால் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு காவல் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.