மின் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
தமிழ்நாடு மின்சார வாரியம், ஆட்டையாம்பட்டி மின்சாரத் துறை சாா்பில், மின் சேமிப்பு, பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்டையாம்பட்டியில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
சேலம்மின் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
தமிழ்நாடு மின்சார வாரியம், ஆட்டையாம்பட்டி மின்சாரத் துறை சாா்பில், மின் சேமிப்பு, பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்டையாம்பட்டியில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி: தமிழ்நாடு மின்சார வாரியம், ஆட்டையாம்பட்டி மின்சாரத் துறை சாா்பில், மின் சேமிப்பு, பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்டையாம்பட்டியில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியானது ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையத்தில் தொடங்கி, முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மின் அலுவலகத்தை அடைந்தது. இதில், மழைக் காலத்தில் பொதுமக்கள் மின்சாரத்தை எப்படி பயன்படுத்துவது, எந்தெந்த வகையில் மின்சாரத்தை சேமிப்பது என்பன போன்ற துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்தப் பேரணியில் ஆட்டையாம்பட்டி செயற்பொறியாளா் சங்கர சுப்பிரமணியம், உதவிப் பொறியாளா் பிரேமா, உள்கோட்ட உதவிப் பொறியாளா்கள், களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.